புற்றுநோய் பாதித்த 2 வயது சிறுவன்… மொட்டை போட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவுக்கு அளிக்கும் விதமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன், புற்றுநோயால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிகிச்சையின் காரணமாக சிறுவனின் தலை முடி கொட்டி வருகிறது. இதனால் சிறுவன் வருத்தப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.
சிறுவனின் சோகத்தைப் போக்க ஜார்ஜ். டபிள்யூ புஷ் தானும் மொட்டையடித்துக் கொண்டார்.
இதற்கு காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ் சின் 4 வயது குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுதானாம்.












Click it and Unblock the Notifications