முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு காலமானார்!

லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் தீவிர அரசியலில் இருந்து சற்றே விலகி இருந்தாலும் ஊடகங்களில் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார் அருண் நேரு. கடந்த சில வாரங்களாக அவர் உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் அண்மையில் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அருண்நேரு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications