தெலுங்கானா 'ஆலோசனை' முடிந்துவிட்டது - உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பு- திக்விஜய்சிங்

லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய நிலைக்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டது. இதற்காக அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், ஆந்திர மாநில காங்கிரசாருடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று ஆந்திர மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் திக்விஜய்சிங், சுஷில்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆசாத் ஆகியோர் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், தெலுங்கானா தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் முடிந்துவிட்டது. உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டியுடன் தெலுங்கானா தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications