Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் காலைக்கடனை கழிக்கச் சென்ற பெண் 6 பேரால் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் காலைக்கடனை கழிக்கச் சென்ற பெண் 6 பேரால் கற்பழிக்கப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத்நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் காலைக்கடனை கழிக்க தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் 6 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தாலும் அப்பெண் நேற்று தான் முராத்நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+