Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்ற அரசு விழாவில் ரகளை… கூச்சல் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

திருப்புவனம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படாததை கண்டித்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

30.54 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் திறந்து வைத்தார். விழாவிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வநாயகம் தலைமை வகித்தார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜா ராமன், எம்.எல்.ஏ குணசேகரன், பிற்பட்டோர் நலவாரியத் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் கல்வெட்டு திறக்கும் போதே அதிமுக வினர் முதல்வர் ஜெயலலிதா படம் இல்லை என்று கூறி தகராறு செய்தனர். காரில் ஏறப்போன அமைச்சர் மீண்டும் திரும்பி வந்து அமைச்சரிடம் விளக்கம் கேட்டார். அப்போது அதிமுகவினர் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

கூச்சலும் குழப்பமுமாக விழா நடைபெற்ற இடம் மாறியது.

Ruckus in minister Vaigaiselvan meeting in Thirupouvanam

அதிமுகவினரை அமைதியாக இருக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ உமா தேவன் கேட்டுக் கொண்டார் ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படும் என்று கூறியதோடு படத்தை எடுத்துக் கொண்டு வைத்தார். இதனையடுத்து விழா தொடர்ந்து நடைபெற்றது.

கூச்சல் குழப்பம் காரணமாக அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் எதுவும் பாடப்படாமலேயே முடிந்தது. இதனை கலெக்டர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலரும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+