ஸ்பெக்ட்ரம் வழக்கு: அனில் அம்பானி ஆக.22ல் ஆஜராக கோர்ட் புது சம்மன்

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற ஸ்வான் நிறுவனம் தகுதி அற்றது. முறைகேடாக உரிமம் பெற்றிருக்கிறது என்பது சிபிஐ புகார். இது தொடர்பாக 3 ரிலையன்ஸ் குழும அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது. இதனால் ஸ்வான் நிறுவனத்தை தொடங்கிய ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தமது சாட்சியாக சேர்த்தது.
இதை ஏற்று விசாரணை நீதிமன்றம் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை வரும் திங்கள்கிழமையன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க வேன்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தாம் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பின்னர் எந்த தேதியில் வேன்டுமானாலும் ஆஜராக தயார் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொன்ட சிபிஐ நீதிமன்றம் ஆகஸ்ட் 22-ந் தேதி அனில் அம்பானியும், ஆகஸ்ட் 23-ந் தேதி அவரது மனைவி டினா அம்பானியும் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க புதிய சம்மன் அனுப்பியது.












Click it and Unblock the Notifications