அவதூறு வழக்கு ஆகஸ்ட் 29ல் விஜயகாந்த் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த்க்கு சொந்தமான கேப்டன் டிவியில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் விஜயகாந்த் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதேபோல தொலைக்காட்சியில் அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், செய்தி ஆசிரியர்கள் இருவர் ஆகஸ்ட் 21ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications