ஒருவரை ஒதுக்கி விட்டு இன்னொருவருடன் சந்தோஷம்... காதலியைக் கொன்றார் காதலர்!
சென்னை: தான் காதலித்து வந்த நபரை ஒதுக்கி விட்டு இன்னொருவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவருடன் சந்தோஷமாக இருந்த பெண்ணை கொன்றார் காதலர். பின்னர் உடலைத் தூக்கி கூவம் ஆற்றில் போட்டு விட்டுப் போய் விட்டார். தற்போது அந்தக் காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு பகுதியில் உள்ள கூவத்தில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்னர். விசாரணையில் அந்தப் பெண் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் போலீஸாருக்கு ஒரு போன்வந்தது. அதில் பேசிய நபர், நீங்கள் கண்டுபிடித்துள்ள உடலுக்குச் சொந்தக்காரர் நீலாவதி. அவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு விவரம் தெரிவிக்கவில்லை. போனை வைத்து விட்டார். இதையடுத்து அந்த எண்ணிலிருந்து பேசிய நபரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரது பெயர் அருண், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
ஆனால் அருண் அவரது வீட்டில் இல்லை. பென்னாடத்தில் இருந்தார். இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று அருணை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
நீலாவதி பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர். அவரும்,அருணும் காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் அருணைத் தீவிரமாக காதலித்துள்ளார் நீலாவதி. ஆனால் நாளடைவில் அருணை ஒதுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் குழப்பமடைந்த அருண், ரகசியமாக விசாரித்தபோதுதான் நீலாவதி, புதிய நபரைப் பிடித்தது தெரிய வந்தது. அந்த நபருடன் ஏற்பட்ட மோகத்தில், பழைய காதலரை ஒதுக்கியுள்ளார் நீலாவதி.
இது தெரிய வந்து கோபமடைந்தார் அருண். நீலாவதியை கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்து விட்டு கூவத்தில் வீசி விட்டார்.












Click it and Unblock the Notifications