தெலுங்கானா செய்தியை டிவியில் பார்த்த கடப்பா விவசாயி மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
கடப்பா: ஆந்திராவை பிரிப்பது குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அலங்கானுபள்ளி அருகே உள்ள ராயலபந்துலா காரி பள்ளியைச் சேர்ந்தவர் மஹபூப் பாஷா(48). விவசாயி. அவர் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் நேற்று இரவு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கர்ணூல்-கடப்பா கால்வாய் அருகே உள்ள வயலில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் தனி தெலுங்கானா செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications