ஒரே நாளில் 65 தமிழக மீனவர்கள் கைது! யாழ், முல்லைத் தீவில் மீன்பிடித்ததாக அப்பட்ட பொய்!!

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத் தீவுப் பகுதிகளில் மீன்பிடித்ததாக அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் கடற்படை செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுலசூர்யா கூறுகையில். இது தொடர்பாக அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் பருத்தித் துறை அருகே 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 34 'இந்திய' மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். முல்லைத் தீவு கடற்பரப்பில் 4 படகுகளில் மீன்பிடித்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 65 மீனவர்களும் பருத்தித் துறை மற்றும் திருகோணமலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications