'குட்டைப் பாவாடைக்குத் தடா, பேண்ட் ஓகே... : இங்கிலாந்து பள்ளி மாணவிகளுக்கு விநோதக் கட்டளை
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வருகிறது வாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் தான் இந்த புதிய சீருடைத் திட்டத்திஅ அமல் படுத்தியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.
இந்த சீருடைத் திட்டம் வரும் செப்டம்பர் முதல் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வரும் 2014-ம் ஆண்டு முதல் இருபாலருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர உள்ளது இப்பள்ளி.
இங்கிலாந்தில், சமீபத்தில் இதுபோன்று 63 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் ஸ்கர்ட் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாணவிகளின் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், உடைக் கட்டுப்பாடு மாணவிகளின் நலனுக்கே என எடுத்துரைக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான டேவிட் டவுட்பயர்.












Click it and Unblock the Notifications