கல்லூரி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்... பஞ்சாயத்து அலுவலக எழுத்தர் கைது
Subscribe to Oneindia Tamil
வளளியூர்: நெல்லை மாவட்டம் வளளியூர் அருகே கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பஞ்சாயத்து எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்தவர் ரவி மகள் செல்வி. கல்லூரி மாணவி. இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் வந்தது. இதுகுறித்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது வள்ளியூர் அருகே அச்சம்பாட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்திரகுமார் என்பது தெரிய வந்தது. இவர் அந்த பஞ்சாயத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து போலீசார் சந்திரகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications