ராஜ்யசபா உறுப்பினராக இன்று தமிழில் பதவியேற்ற கனிமொழி
தமிழக ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிந்த பிறகு முறையே தேர்தல் நடத்தி திமுகவின் கனிமொழி உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கனிமொழியை தவிர மற்ற 5 பேரும் கடந்த மாதம் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது ஆடி போர்க்காலம் நடந்ததால் தான் கனிமொழி பதவி ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்காலம் என கூறப்படுகின்றது.
இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அப்போது கனிமொழி ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு அவை தலைவர் ஹமீத் அன்சாரியின் இருக்கைக்கு சென்று வாழ்த்து பெற்றார். கனிமொழிக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதம் அவை உறுப்பினர்கள் மேஜையைத் தட்டினர்.