மும்பை: நீச்சல் பயிற்சியின் போது பக்கவாதம் தாக்கியதால் நீரில் மூழ்கி பலியான முதியவர்
மும்பை: நீச்சல் பயிற்சி மேற்கொண்ட போது பக்கவாதம் தாக்கியதால், கரையேற இயலாமல் 52 வயது முதியவர் ஒருவர் மும்பையில் பரிதாபமாகப் பலியானார்.
மும்பையில் வசித்து வந்த 52 வயது நாராயண் டிக்-ற்கு காலையில் வாக்கிங் செல்வது வழக்கமாம். நேற்றும் வழக்கம்போல் வாக்கிங் புறப்பட்ட அவருடன், அவரது 13 வயது மகன் ஓம்கார் சென்றுள்ளான். வாக்கிங் செல்லும் வழியில் குளமொன்றைக் கண்ட நாராயண் அதில் இறங்கி நீச்சல் அடிக்க திட்டமிட்டுள்ளார்.
தண்ணீருக்குள் இறங்கி நீந்தத் துவங்கிய நாராயண் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓம்கார், நீச்சல் தெரியாத காரணத்தால் மற்றவர்கள் உதவி வேண்டி சத்தமிட்டுள்ளான்.
ஆனால், மீட்புப் படையினர் வந்து, நாராயணனின் உடலை மட்டிமே மீட்க முடிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட நாராயண் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அதில், இறப்பதற்கு முன் நாராயண் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டது தெரிய வந்தது. அதனாலேயே அவர் மேற்கொண்டு நீந்த முடியாமல் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications