திருநங்கைகளுக்கு 30 பசுமை வீடுகள்
Subscribe to Oneindia Tamil
கோவை: மேட்டுப்பாளையம் அருகே திருநங்களைக்கு 30 பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டி கிராமம் பஞ்சுக்காட்டுபுதூரில், ஒரே இடத்தில் ஒவ்வொரு வீடும், இரண்டே முக்கால் லட்சம் செலவில், அடிப்படை
வசதிகளுடன் தனித்தனி வீடாகக் 30 பசுமை வீடுகளை திருநங்கைகளுக்கு வழங்க கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்திலேயே, திருநங்கையருக்காக தனித்தனி வீடுகளாக உருவாக்கப்பட்டுள்ள முதல் குடியிருப்பு இது. இதனை செயல்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு திருநங்கைகள் நன்றிதெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க முன்வராத நிலையில் அரசின் இந்த திட்டம் தங்களுக்கு வரப்பிரசாதம் என்கின்றனர் அவர்கள்..












Click it and Unblock the Notifications