பாபர் மசூதி இடிப்பு...முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவுக்கு முன்பே தெரியும்: முலாயம்சிங்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியன்று நான் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் 18 பேர் அடங்கிய குழு ஜனாதிபதியாக இருந்த சங்கதயாள் சர்மாவை சந்தித்தோம். அயோத்தி நிலவரம் தொடர்பான எங்களது கவலையைத் தெரிவித்தோம். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படும் என்ற அச்சத்தையும் தெரிவித்தோம்.
அப்போது எங்களது கடிதத்தைப் பார்த்துவிட்டு அங்கு மசூதி நிச்சயமாக இடிக்கப்பட்டுவிடும் என்று எங்களிடம் கூறினார். நான் இதனை யாரிடமும் கூறவில்லை. அதன் பின்னர் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications