டிஜிபிக்கு அனுமதி மறுப்பு தமிழகத்திற்கு பெருத்த அவமானம்... கருணாநிதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி ராமானுஜத்திற்கு அனுமதி மறுத்த செயல், தமிழகத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெரிய அவமானமாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தமிழகத்திற்கும், குறிப்பாக காவல்துறைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதப்பட வேண்டும். மாநிலத்தின் டி.ஜி.பி. யார் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் பிரதமரின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதே வேதனையான ஒன்று.
இதுபற்றி முறையாக விசாரித்து தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்; நல்லுறவை வளர்க்கும். பிரதமரின் பாதுகாப்பு முக்கியம்தான், அதே நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது நல்லதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications