ராஜீவ் கொலை குற்றவாளி நளினி செல்போன் வழக்கு: ஆகஸ்ட் 19க்கு ஒத்தி வைப்பு
வேலூர்: வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சிறைக்குள் செல்போன் வைத்திருந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினி, சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நளினியை போலீசார் இன்று வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
விசாரணையின்போது, "கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள எனக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் வைத்திருந்ததாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதில் எனக்கு தொடர்பில்லை" என்று நளினி மறுத்தார்.
இதையடுத்து வேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் மீண்டும் நளினி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications