For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் ரவுண்டு முடிந்தது.. இனி விஜயகாந்த்தான் கோர்ட்டுக்கு அலைவார்- நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

Vijayakanth will shunt to courts to face defamation cases, says Nanjil Sampath
திண்டுக்கல் என் மீது போடப்பட்ட 48 அவதூறு வழக்குகளும் நீங்கி விட்டன. இனி விஜயகாந்த்தான் கோர்ட் கோர்ட்டாக அலைவார் என்று கூறியுள்ளார் மதிமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி துணை கொ.ப.செவாக பதவி பெற்ற நாஞ்சில்சம்பத்.

திண்டுக்கல் கோர்ட்டில் சம்பத் மீது முதல்வரை அவதூறாகப் பேசியதாக 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை நேற்று வாபஸ் பெறப்பட்டன.

இதற்காக நேற்று சம்பத் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என் மீது போடப்பட்ட, 48 அவதூறு வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இனி, விஜயகாந்த் தான் கோர்ட்டிற்கு வருவார்.

லோக்சபா தேர்தலில், அதிமுக அதிக இடம் பெறும். தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்கள் பிரதமராகும் போது, எட்டு மொழி பேசக்கூடிய, ஒன்றரை கோடி கட்சி உறுப்பினர்களை கொண்ட தமிழக முதல்வர், ஏன் பிரதமராக முடியாது என்றார் சம்பத்.

English summary
DMDK leader Vijayakanth will shunt to courts to face defamation cases, says Nanjil Sampath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X