For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காயல்பட்டணத்தில் ரம்ஜான்.. தொழுகையுடன் நேற்று கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

Ramzan celebrated in Kayalpattinam
காயல்பட்டணம்: காயல்பட்டணம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் 8ம் தேதியான நேற்று ரமலான் நோன்பு பெருநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, காயல்பட்டணம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன்-இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டணம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

காயல்பட்டணம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தினார். அதனைத்தொடர்ந்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபு அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.

நோன்பு பெருநாள் தொழுகையில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் தஸ்தகீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் அபுல்ஹஸன் கலாமீ, உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

தொழுகையின்போது பெண்களுக்கு தனியிட வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தொழுகையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

English summary
Ramzan was celebrated in Kayalpattinam yesterday with prayers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X