மேட்டூர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தம்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் 1லட்சம் கண அடியை தாண்டியதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் முழு கொள்ளவை அணை எட்டியது. அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த 4ஆம் தேதி மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் தற்போதைய நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு முழு கொள்ளளவான 93.4 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 924 கன அடியாக குறைந்துவிட்ட நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 389 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலமாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர், ஞாயிறுமுதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications