சொத்துக் குவிப்பு வழக்கு- திமுக மனுவை நிராகரிக்க ஜெ. தரப்பு கோரிக்கை!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பல ஆண்டுகாலமாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் நேற்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பையும் வாதாட அனுமதிக்கவும் அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று பதில் மனுத்தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு, வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுகவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications