சுதந்திரதின விழாவில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது: மோடி பேச்சுக்கு அத்வானி பதிலடி
Subscribe to Oneindia Tamil

நேற்று நாடெங்கும் 67வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். அந்த வகையில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.
மோடியின் இந்த்ப் பேச்சைக் கண்டிக்கும் வகையில், நேற்று காலை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.
அதில், "இன்று சுதந்திர தின நாள். இந்த நாளில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications