ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு 20ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைக் கடந்து தற்போதுதான் இறுதி கட்ட விசாரணையை எட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென திமுக சார்பில் தங்களையும் வழக்கில் வாதாட அனுமதிக்க கோரி ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு ஜெயலலிதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இன்று திமுக மற்றும் ஜெயலலிதா தரப்பு மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வரும் 20-ந் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications