சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. 4 உடல்கள் மீட்பு!! 14 பேரின் உடலை தேடும் பணி தீவிரம்!!
மும்பை: மும்பையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான ஐ.என்.எ.ஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 14 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,
ஐ.என்.எஸ். சிந்துரக்சக் கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள், 3 கடற்படை அதிகாரிகள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு திடீரென நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தொடர் வெடிவிபத்துகளால் தீவிபத்து ஏற்பட்டு கப்பல் கடலில் மூழ்கியது.

இதில் இருந்த 18 கடற்படையினரும் உயிரிழந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 14 உடல்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இதனிடையே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 18 பேரின் பெயர்களை கடற்படை வெளியிட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கடற்படை அதிகாரிகள்: நிகிலேஷ் பால், அலோக் குமார், ஆர். வெங்கிட ராஜ்.
15 மாலுமிகள்: சஞ்சீவ் குமார், கேசி உபாத்யா, திமோதி ஷின்ஹா, கேவல் சிங், சுனில்குமார், தாசரி பிரசாத், லிஜூ லாரன்ஸ், ராஜேஸ் டூடிகா, அமித் கே சிங், அதுல் சர்மா, விகாஷ், நருட்டாம் தேயூரி, மலாய் ஹல்தார், விஷ்ணு, சீதாராம் பாடபள்ளி
தற்போது மீட்கப்பட்ட 4 உடல்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications