Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. 4 உடல்கள் மீட்பு!! 14 பேரின் உடலை தேடும் பணி தீவிரம்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான ஐ.என்.எ.ஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 14 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,

ஐ.என்.எஸ். சிந்துரக்சக் கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள், 3 கடற்படை அதிகாரிகள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு திடீரென நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தொடர் வெடிவிபத்துகளால் தீவிபத்து ஏற்பட்டு கப்பல் கடலில் மூழ்கியது.

Naval dockyard following the INS Sindhurakshak submarine mishap

இதில் இருந்த 18 கடற்படையினரும் உயிரிழந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 14 உடல்களைத் தேடும் பணி தொடர்கிறது.

இதனிடையே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 18 பேரின் பெயர்களை கடற்படை வெளியிட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கடற்படை அதிகாரிகள்: நிகிலேஷ் பால், அலோக் குமார், ஆர். வெங்கிட ராஜ்.

15 மாலுமிகள்: சஞ்சீவ் குமார், கேசி உபாத்யா, திமோதி ஷின்ஹா, கேவல் சிங், சுனில்குமார், தாசரி பிரசாத், லிஜூ லாரன்ஸ், ராஜேஸ் டூடிகா, அமித் கே சிங், அதுல் சர்மா, விகாஷ், நருட்டாம் தேயூரி, மலாய் ஹல்தார், விஷ்ணு, சீதாராம் பாடபள்ளி

தற்போது மீட்கப்பட்ட 4 உடல்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+