'கேஸ்' போடாம விட மாட்டோம்.. அதிகாரிகளுக்கு அன்புமணி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

Anbumani Ramadoss
வந்தவாசி: எங்கள் மீது வழக்குப் போடும் அதிகாரிகளை நாங்கள் சும்மா விட மாட்டோம். நாங்கள் அவர்கள் மீது வழக்குப் போடுவோம். அப்போது அவர்களைக் காப்பாற்ற ஜெயலலிதா வர மாட்டார் என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

வந்தவாசிக்கு வந்த அவர் அங்கு நடந்த பாமக கூட்டத்தில் பேசுகையில்,

தருமபுரி இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.

நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை.

பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+