புதுச்சேரிக்கு சுதந்திர தினம் நவ.1.. குடியரசு தினம் ஆக.16.. கிளம்பும் புதுசர்ச்சை!
புதுச்சேரி: நாட்டின் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுவதைப் போல ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாக கொண்டாடாமல் நவம்பர் 1-ந் தேதிதான் சுதந்திர தினமாக கொண்டாடுவோம் என்று பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தை பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கத்தினர் கடைபிடித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி சிவ. இளங்கோ, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதிதான் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரிவிடுதலை பெற்றது.
அந்த நாள்தான் புதுச்சேரி மக்களுக்கான சுதந்திர தினம். அதேபோல் ஆகஸ்ட் 16-ந் தேதிதான் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் புதுச்சேரி கொண்டுவரப்பட்டது. ஆகையால் அந்த நாளையே நாங்கள் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு புதுவை அரசிடம் பலமுறை வலியுறுத்திவிட்டோம். அப்படிச் செய்யாவிட்டால் அது வரலாற்று பிழையாகிவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications