கார்கிலை தாக்கிய சிறிது நேரத்தில் மெந்தார், ஹமிர்பூர் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் கார்கிலில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சில மணிநேரத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் மற்றும் ஹமிர்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிலைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மை காலமாக அடிக்கடி இந்திய நிலைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது. 14 ஆண்டுகள் கழித்து நேற்று இரவு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் மற்றும் ஹமிர்பூர் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் யாரேனும் உயிர் இழந்தார்களா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா கூறுகையில்,
நேற்று இரவு 9.45 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது என்றார்.












Click it and Unblock the Notifications