சென்னையில் அரங்கேற்றம் செய்த துபாய் பள்ளி மாணவிகள்
சென்னை: சென்னையில் துபாய் பள்ளி மாணவிகள் ஜனனி மற்றும் கோபிகா ஆகியோர் 11.08.2013 அன்று மாலை வாணி மஹாலில் தங்களது நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சீதாலட்சுமி சுரேஷ் மற்றும் சுரேஷ் கிருஷ்ணன் தம்பதியரின் மகள் ஜனனி. சந்திரா மற்றும் கீதாகிருஷ்ணன் தம்பதியரின் மகள் கோபிகா. அவர்கள் இருவரும் தங்களது பரதநாட்டிய அரங்கேற்றத்தினை பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி அனைவரது பாராட்டினையும் பெற்றார்.
சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற கலைமாமணி நரசிம்மாச்சாரி தலைமை விருந்தினராக பங்கேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி. கலைமாமணி ஷோபனா ரமேஷ், ஓகேஸ்வரி சண்முகநாதன், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற துபாய் தமிழ்ச் சங்க நிறுவனப் புரவலரும், துணைத் தலைவருமான குத்தாலம் ஏ லியாக்கத் அலி, நிறுவனப் புரவலரும், பொழுதுபோக்குத்துறை செயலாளருமான ஏ முஹம்மது தாஹா, பொதுச் செயலாளர் ஜெகநாதான், துணைப் பொதுச் செயலாளர் பிரசன்னா, ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன், இணைப் பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசினை ஜனனி மற்றும் கோபிகாவிற்கு வழங்கி கௌரவித்தனர்.
பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவியரின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

ஜனனி, கோபிகா
அரங்கேற்ற நிகழ்ச்சியில் பாவனை செய்யும் மாணவிகள்.

மாணவிகள்
துபாயில் இருந்து வந்து சென்னையில் அரங்கேற்றம் நடத்திய மாணவிகள்.

கவிதா பிரசன்னா
புஷ்பாஞ்சலியில் துவங்கி பல்வேறு கீர்த்தனங்களைப் பாடினர். மாணவியரின் ஆசிரியை கவிதா பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற அமைந்திட வாத்தியக் கருவிகளை வாசித்து அவையோரின் பாராட்டினைப் பெற்றனர். சிகை அலங்காரத்தினை சேது மாதவன் செய்திருந்தார்.

பாராட்டு
நரசிம்மாச்சாரி, அப்துல் ரஹ்மான் எம்.பி, மற்றும் ஷோபனா ரமேஷ் ஆகியோர் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பாராட்டினர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications