திருச்சி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் கூலித் தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வண்டலை கூடலூரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா (24). அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Trichy woman giving birth 3 babies

இந்நிலையில், ரேகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் ரேகாவுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அலெச்சாண்டர் கூறுகையில்,

ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினோம். ஆனால் தற்போது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் நாங்கள் எப்படி ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை வளர்க்கப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+