திருச்சி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
திருச்சி: திருச்சியில் கூலித் தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வண்டலை கூடலூரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா (24). அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ரேகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் ரேகாவுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அலெச்சாண்டர் கூறுகையில்,
ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினோம். ஆனால் தற்போது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் நாங்கள் எப்படி ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை வளர்க்கப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை என்றார்.