ஈரோடு வீட்டில் திடீர் வெடிவிபத்து.. 2 பேர் பலி.. வெடித்தது சிலிண்டரா, வேறு எதுவுமா??
ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒருவரது வீட்டில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். வெடித்தது சிலிண்டராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் வேறு எதுவும்வெடித்ததா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
வரதராஜ் என்பவரது வீட்டிலிருந்து இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. புகை குபுகுபுவென வந்தது. அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது.
இந்த சமயத்தில் வீட்டிலிருந்து பலத்த சத்தமும் கேட்டது. ஏதோ வெடித்த சப்தம் அது. இதனால் தீ மேலும் பரவியது. இந்த கோர விபத்தில் வரதராஜின் தாயார் சரஸ்வதி, அவரது சகோதரி மகாலட்சுமிஆகியோர் சம்பவ இடத்திலேயே கருகிப் போய் உயிரிழந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ராஜ்குமார், வரதராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications