ஜக்கர்பர்க் பக்கத்தை ஹேக் செய்து புகார் தெரிவித்தவரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை(bug) குறித்து அந்நிறுவன குழுவிடம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கலீல் ஷ்ரியதே என்பவர் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாததால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் பக்கத்தை ஹேக் செய்து அதில் புகார் தெரிவித்தார் கலீல்.
ஃபேஸ்புக்கில் உள்ள பக்குகள்(bugs) குறித்து புகார் கொடுத்தால் அந்நிறுவனம் பரிசளிக்கும். ஆனால் கலீலுக்கு பரிசுக்கு பதிலாக அவரது ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஃபேஸ்புக்கின் சட்டதிட்டங்களை மீறியதால் உங்களின் கண்டுபிடிப்புக்கு பரிசளிக்க முடியாது. ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் தொடர்ந்து கண்டுபிடித்து தெரிவிக்கலாம் என்று கலீலுக்கு மெசேஜ் வந்துள்ளது.
கலீல் தெரிவித்த பக் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு என்ஜினியர் மேட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications