இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா!
பெய்ஜிங்: இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விக்ரந்த் மற்றும் அணுசக்தியால் இயங்கும் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதை 'மிகப் பெரிய ராணுவ கட்டமைப்பாக' சீனா கருதுகிறது.
சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இணையதளத்தில் இதுபற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையின் சுருக்கம்":
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் ஆகஸ்ட் 12-ந் தேதி ஐ.என்.எஸ். விக்ராந்த் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல். ஜப்பானின் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாட்களிலேயே இந்தியாவும் அறிமுகம் செய்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய ஊடகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா சேர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளன. இந்தியாவின் கப்பல் கட்டுமானத் துறையில் இது மைல்கல் என்றெல்லாம் பாராட்டுகின்றனர்.

ஐ.என்.எஸ். விக்ராந்த், அரிஹாந்த்
இருப்பினும் உள்நாட்டு ஆயுத தயாரிப்பில் இந்தியா எப்படி முக்கியத்துவம் காட்டுகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த உள்நாட்டு போர்க் கப்பல் உருவாக்கத்துக்காக பல பில்லியன் டாலரை இந்திய அரசு முதலீடு செய்திருக்கிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக ஐ.என்.எஸ். அரிஹாந்த் என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியா அறிமுகம் செய்தது.

இந்தியாவுக்கு ஆயுதம் கொடுக்கும் வெளிநாடுகள்
சீனாவின் வலிமைக்கு இணையாக இந்தியாவை சமன்படுத்திக் கொடுக்கும் வகையில் பல நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் ஆவல் என்ன என்பதை இந்தியா நன்கு அறியும். இந்திய ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இந்தியாவின் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கேள்வி எழுப்பும் விக்ரந்த்
ஐ.என்.எஸ். விக்ரந்த் போன்ற விமானந் தாங்கி போர்க்கப்பலால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் போக்கை மாற்றிவிட முடியாது எனினும் சில கேள்விகளை அது எழுப்பாமல் இல்லை. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சியடையாமல் போனால் ஆசிய-பசிபிக் நூற்றாண்டு என்பது சாத்தியமல்ல என்று சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாபிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் போட்டி என்பது இந்த பிராந்தியத்தில் பதற்றத்தையே உருவாக்கும்.

ராணுவக் குவிப்பில் இந்தியா
சீனாவைப் பொறுத்தவரையில் பொருளாதார வளர்ச்சியில்தான் அக்கறை செலுத்துகிறது. இந்தியாவோ ராணுவக் குவிப்பில் அக்கறை செலுத்துகிறது. இந்தியாவின் 40% மக்கள் வறுமையில் வாடும் நிலையில் இந்தியாவின் ராணுவக் குவிப்பு சந்தேகங்களை எழுப்புகிறது. சீனா ஒருபோதும் ஆயுதப் போட்டியை ஊக்குவித்தது கிடையாது. ஆனால் சீனாவின் தேசநலன்கள் சுற்றியுள்ள நாடுகளால் சீர்குலைக்கப்பட்டே வருகின்றன.

சீனாவுக்கு எதிராக இந்தியா, ஜப்பான்
இந்தியா மற்றும் ஜப்பானின் போர்க்கப்பல் அறிமுக நடவடிக்கை சீனாவுக்கான ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications