மீண்டும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் ரூ.24,000யைத் தாண்டியது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து, இன்று பவுன் 24,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சவரன் 19 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனால், நடுத்தர மக்கள் தங்கங்களை வாங்க நகைக் கடைக்கு படையெடுத்தனர்.
கடந்த ஒருவார காலமாக தங்கம் விலை தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரே நாளில் சவரன் 1000 ரூபாக்கு மேல் உயர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் விலை உயர்வு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 24,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து 3,003 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 3,212 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிலோவுக்கு 260 ரூபாய் உயர்ந்து 53,265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து 57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.