இந்திய பங்குச் சந்தையில் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட இழப்பு ரூ. 6,00,000 கோடிகள்!!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரூபாயின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அதாவது பங்குகளின் விலை சரிவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கணக்குப்படி இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ. 58,60,000 கோடி. நேற்று மட்டும் இதில் ரூ. 1,09,000 கோடி காற்றோடு கரைந்துபோய்விட்டது.

அதாவது கடந்த 4 நாட்களில் மும்பை பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளை இழந்துள்ளது. இதனால் ரூ. 6 லட்சம் கோடி இழக்கபட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 11 சதவீதம் சரிந்துவிட்டது. கடந்த 7 நாட்களில் மட்டும் 7 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு ரூ. 72 லட்சம் கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 70 லட்சம் கோடியாக இருந்தது. இதன் பின்னர் தொடர் சரிவு தான்.

Sensex crash: Market loses over $100 billion in four days

இப்போது கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+