பள்ளி விடுதியில் ‘ராகிங்’: பயந்து ஓடிய 19 மாணவர்கள்...21 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சீனியர்களின் ராகிங் கொடுமைக்கு பயந்து பள்ளி விடுதியில் இருந்து தப்பித்துச் சென்ற 19 மாணவர்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களை ராகிங் செய்த குற்றத்திற்காக 21 சீனியர் மாணவர்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

முன்பெல்லாம் ராகிங் என்றால் அது கல்லூரிக்குச் சென்ற பிறகு தான் என எண்ணிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் தற்போது பள்ளியிலேயே ராகிங் கொடுமை செய்யப் படுவது அதிர்ச்சியை அளித்துள்ளது.

அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில்,உள்ளது ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி. அங்கு பயிலும் மாணவர்கள் பலர் விடுதியில் தங்கியுள்ளனர். சீனியர்கள் ராகிங் செய்ததால், அவர்களுக்கு அஞ்சி பள்ளி விடுதியை விட்டி வெளியேறினர்.

மாணவர்கள் காணாமல் போன தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியதால், அம்மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராகிங் விஷயம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ராகிங் செய்த குற்றத்திற்காக, சீனியர் மாணவர்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+