செக்ஸ் ஆசையைக் கூட்ட ஹிட்லர் செஞ்ச வேலையைப் பாருங்க...!
லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத்தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம்.
எலி விஷத்தை சாப்பிட்டுள்ளார். காளை மாட்டின் விந்தனுவை எடுத்துக் குடித்துள்ளார். கேட்கவே தாறுமாறாக வாந்தி வர வைக்கிறது அவர் செய்த காரியங்களைப் பார்க்கும்போது.
இதுகுறித்து ஒரு டிவி டாக்குமென்டரிப் படத்தில் தெரிவித்துள்ளனர். அதிலிருந்து சில....

ஏகப்பட்ட உடல் நலக் கோளாறுகள்
ஹிட்லருக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அவருக்கு பர்கின்சன் நோய் இருந்துள்ளது. மன அழுத்தம் இருந்துள்ளது. அவரது விதைப் பை சரியாக இல்லை. செக்ஸ் ஆசையும் குறைவாகவே இருந்துள்ளது.

மனசு, உடம்பு கட்டுப்படவில்லை
அவருக்கே தனது மனதும், உடம்பும், செக்ஸ் ஆசையும் தன்னை விட்டு நழுவிப் போய் வருவது தெரிந்துள்ளது. இதனால் அவற்றை சரி செய்ய பல உபாயங்களைக் கடைப்பிடித்துள்ளார்.

கொகைன் அடித்தார்
இதற்காக கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். ஆம்பிடமைன் ஹார்மோன் மருந்தை பயன்படுத்தியுள்ளார்.

டாக்டரின் ஆலோசனையின் பேரில்
அவருக்கு டாக்டராக இருந்தவர் தியோடர் மோரல். ஆனால் இவரை பலர் போலி டாக்டர் என்றும் கூறுகிறார்கள். இவர் ஆலோசனைப்படிதான் பல மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார் ஹிட்லர்.

ஒரு நாளைக்கு 80 மருந்து
ஹிட்லருக்கு ஒரு நாளைக்கு 80 மருந்துகள் கொடுக்கப்பட்டனவாம். டானிக், அது, இது என்று மனிதர் மருந்திலேயே மூழ்கியிருந்துள்ளார்.

மாட்டு விந்து
காளை மாட்டின் விந்தையும் அவர் எடுத்துக் குடித்துள்ளார். அதேபோல எலி விஷத்தையும் கசாயம் போல குடித்துள்ளார். இதற்குக் காரணம் செக்ஸ் ஆசையைக் கூட்ட வேணடும் என்பதற்காகவாம். அதேபோல பற்களைக சுத்தம் செய்ய எண்ணெயையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஊசி போட்டு ஆசையை வரவைக்க முயற்சி
மேலும் ஹிட்லர் தனது இளம் மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பல்வேறு ஊசிகளையும் போட்டு வந்துள்ளார். இதையும் தியோடர்தான் போட்டாராம்.

லிபிடோவை அதிரிக்க ஊசி
அதேபோல தினசரி தனது இளம் மனைவி ஈவா பிரவுனுடன் படுக்கை அறைக்குள் செல்வதற்கு முன்பு லிபிடோவைக் கூட்டுவதற்காக ஒரு ஊசி போட்டுக் கொள்வாராம் ஹிட்லர்.

ஊசி மருந்தால்தான் இப்படி மாறிட்டாரோ...!
இந்த ஊசி மருந்துகள்தான் ஹிட்லரை முரட்டுத்தனமான, வெறிபிடித்த மனிதராக மாற்றி பல ஆயிரம் யூதர்களைக் கொல்லக் காரணம் என்றும் பலர் சொல்கிறார்கள்.
பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளும் கூட இப்படித்தான் பெரிதாக இருக்கும் போல...!












Click it and Unblock the Notifications