பாலியல் புகார் சாமியார் அஸ்ரம் பாபு வெளிநாடு செல்ல தடை!

Subscribe to Oneindia Tamil

Asaram served summons; to appear in Jodhpur by August 30
அகமதாபாத்: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ள சாமியார் அஸ்ரம் பாபு வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை இருக்கின்றன.

இந்நிலையில் 'அஸ்ரம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்' என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த 16 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் டெல்லி போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தூரின் புறநகரான கண்ட்வாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சென்ற போலீசார், 'ஆகஸ்ட் 30 தேதி போலீசில் ஆஜர் ஆகும்படி' சம்மன் வழங்கினர்.

சம்மனை அளித்துவிட்டு வெளியே வந்த போலீஸ் உதவி-ஆய்வாளர் பன்வார் சிங்,"பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் போலீஸார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் கொடுத்திருக்கிறோம். மேலும், அஸ்ரம் பாபு வெளிநாடு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறோம்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+