விசாரணைக்கு வராமல் இழுத்தடிப்பதா? விஜயகாந்த்க்கு சென்னை கோர்ட் கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: உள்ளூரில் இருந்து கொண்டே அவதூறு வழக்கில் ஆஜராகாத விஜயகாந்த்துக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 12ம் தேதி கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து கொண்டே விசாரணைக்கு வராதது சரியல்ல என்றும், குடும்ப நிகழ்ச்சியை காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு வராததை ஏற்க முடியாது என்றும் நீதிபதி சொக்கலிங்கம் கூறினார்.

இதையடுத்து, செப்டம்பர் 12ஆம் தேதி விஜயகாந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+