நவி பிள்ளையிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை: வைகோவிற்கு கிடைத்த வெற்றி!

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற அமைச்சரின் பேச்சுக்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது இது வைகோவின் அறிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று மதிமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன், இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா, கொச்சைப்படுத்தி பேசினார்.

இவரது இந்த பேச்சின் வீடியோவை ஐ.நா அதிகாரிகள், நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்' என்று கொச்சைப்படுத்தினான்.

இதனைக் கண்டித்து மதிமுக தலைவர் வைகோ அவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, இலங்கை அரசு சார்பில் அமைச்சர் விமல் வீரசேன, நவநீதம்பிள்ளையிடம் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+