டோனி மனைவி சாக்ஷியின் பெர்சனல் போட்டோக்கள்: பேஸ்புக்கில் மர்மநபர்கள் குறும்பு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணியின் மனைவி சாக்ஷியின் பெர்சனல் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகியிருப்பதால் அவரது தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.
மிகவும் தனிப்பட்ட முறையிலான படங்கள் இவை. இதனால்தான் சாக்ஷி தரப்பு கடும் எரிச்சலடைந்துள்ளதாம்.
யார் தனது தனிப்பட்ட புகைப்படக்களை இண்டர்நெட்டில் கசிய விட்டது என்பது குறித்த விசாரணையில் தீவிரமாக உள்ளாராம் சாக்ஷி.
அதெல்லாம் ஓகே....
இதற்கு முன்பு சாக்ஷியின் பல்வேறு விதமான படங்கள் வெளியானபோதிலம் அவையெல்லாம் வெளியில், பொது இடங்களில் எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது வெளியாகியிருப்பவை மிகவும் தனிப்பட்ட முறையிலானவை.
மேக்கப் இல்லாத சாக்ஷி....
பேஸ்புக்கில் இந்தப் படங்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில் மேக்கப் இல்லாமல், வித்தியாசமான போஸ்களில் காணப்படுகிறார் சாக்ஷி.
டோணி எடுத்த போட்டோ....
அவரது வீடு அல்லது வேறு சில இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. டோணி அல்லது சாக்ஷியின் குடும்பத்தினர்தான் இந்தப் படங்கள எடுத்துள்ளனர்.
தனிப்பட்ட படங்கள்....
இந்தப் படங்கள் தனிப்பட்ட முறையிலான படங்கள் என்பதால் இவற்றை பேஸ்புக்கில் லீக் செய்தவர்கள் மீது கடும் கோபமாக இருக்கிறாராம் சாக்ஷி.
யார் செய்த குறும்பு இது...?
யார் மூலம் இந்தப் படங்கள் பேஸ்புக்கில் கசிந்தன என்றும் தற்போது தலையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம் சாக்ஷி.