இந்திய விமானப்படைத் தளபதியின் சீன பயணம் திடீர் ரத்து: மத்திய அரசு அதிரடி
Subscribe to Oneindia Tamil

எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது.
முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.
அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சிக்காக அவர் செல்கிறார். அவரது பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த ஆண்டிலேயே சீனா செல்ல இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications