For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை: நிருபர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பத்திரிக்கை நிருபரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள், தன்னையும் அதே இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

கடந்த வாரம் மும்பை சக்தி மில் பகுதியில் பெண் நிருபர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதே சக்தி மில் பகுதியில், 5 குற்றவாளிகளில் 3 பேரால், கடந்த ஜூலை மாதம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் 5 குற்றவாளிகளில் 3 பேரை அடையாளம் காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும், ஏற்கனவே இந்த சக்தி மில் பகுதியில் பல பெண்களை தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman here on Tuesday alleged that she was gang-raped by three of the accused, out of five, who have been arrested in connection with the recent gang-rape of a 22-year-old photojournalist here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X