கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காததால் உயிரை மாய்த்த எம்.ஐ.டி மாணவர்
சென்னை: கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில், எம்.ஐ.டி மாணவர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கலைக்கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பெரிய பெரிய நிறுவனங்கள் சார்பில் கேம்பஸ் இண்டர்வியூவில் நடைபெற்றது. இதில் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 90 பேர் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் எம்.ஐ.டி கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ஷாகில் முகமது என்ற மாணவர் பங்கேற்றுள்ளார். ஆனால், முகமதுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் முகமது இருந்துள்ளார். இன்று காலை குரோம்பேட்டைக்கு சென்ற அவர் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மாணவரின் சடலத்தைக் கைப்பற்றிய தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.












Click it and Unblock the Notifications