மும்பை ரிசர்வ் வங்கி அருகே பஸ்சில் குண்டு இருந்ததாக பீதி... மர்மப் பையில் இருந்தது வெறும் துணி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ரிசர்வ் வங்கி அருகே, பஸ் ஒன்றில் மர்மப் பை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மாறாக சாதாரண துணிகள்தான் இருந்தன.
ரிசர்வ் வங்கி அருகே மும்பை மாநகர பெஸ்ட் பஸ் ஒன்றில் மர்மமான முறையில் பேக் ஒன்று கிடந்தது. இதனால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர்.

அந்த பேக்கை எடுத்து சோதனை செய்தபோது அதில் துணிகள் இருந்தது தெரிய வந்தது. வேறு எந்தப் பொருளும் அதில் இல்லை. இதையடுத்து வெடிகுண்டு பீதி அகன்று அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.
இன்றுதான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்றார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications