பெங்களூர் பிதாதி அருகே காமக்கொடூரன் ஜெய்சங்கரை பார்த்து பயந்து ஓடிய டிரக் டிரைவர்

பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினான். இதையடுத்து அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவி செய்ததாகக் கூறப்பட்டது.
ஜெய்சங்கர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஹாரோஹல்லி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த டிரக்கை ஒருவர் நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார். யாரோ லிப்ட் கேட்கிறார்கள் என்று நினைத்து டிரைவர் டிரக்கை நிறுத்த முயன்றபோது சாலையோரம் நின்ற நபர் கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் என்பதை டிரைவர் அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜெய்சங்கரைப் பார்த்து பயந்துபோன டிரைவர் டிரக்கை கிளப்பிக் கொண்டு சென்று பிதாதியை அடைந்த பிறகு போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து போலீசார் டிரைவர் கூறிய பகுதிக்கு சென்று ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
அதே சமயம் லிப்ட் கேட்டது ஜெய்சங்கராக இருக்காது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் குழு ஒன்று சேலத்திற்கு சென்று ஜெய்சங்கரின் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகிறது. ஜெய்சங்கருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications