For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை பலாத்கார வழக்கு - 2 குற்றவாளிகள் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக தகவல்

Google Oneindia Tamil News

Teen telephone operator raped at Shakti Mills too subjected to unnatural sex
மும்பை: கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி மும்பையின் சக்தி மில்ஸ் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படு் 19 வயது டெலிபோன் ஆபரேட்டர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரால் இயற்கைக்குப் புறம்பான உறவுக்கும் உட்படுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விரிவாக கேட்டு கூடுதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக தனக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகளில் இருவர் தன்னிடம் இயற்கைக்கு மாறான உறவிலும் கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக தெரிவித்திருந்தாராம்.

தற்போது அந்தப் பெண் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு்ளார். அவருக்கு சற்று மன நிலை இயல்புக்கு வந்தவுடன் மீண்டும் அவரை விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஐந்து குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தையும் போலீஸார் சேகரிக்கவுள்ளனர்.

மேலும் அப்பெண்ணின் துப்பட்டாவும் காணவில்லை. அதையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
The 19-year-old telephone operator, who was allegedly gang raped by five persons in the abandoned Shakti Mills compound on July 31, has told the police that two of the five accused had allegedly committed unnatural sex with her. The police will also record supplementary statement of the victim to get a clarity on the sequence of events. According to sources, the victim has claimed that last two persons who committed the heinous act had also committed unnatural sex with her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X