மும்பை பலாத்கார வழக்கு - 2 குற்றவாளிகள் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக தகவல்
Subscribe to Oneindia Tamil

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விரிவாக கேட்டு கூடுதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக தனக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகளில் இருவர் தன்னிடம் இயற்கைக்கு மாறான உறவிலும் கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக தெரிவித்திருந்தாராம்.
தற்போது அந்தப் பெண் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு்ளார். அவருக்கு சற்று மன நிலை இயல்புக்கு வந்தவுடன் மீண்டும் அவரை விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் ஐந்து குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தையும் போலீஸார் சேகரிக்கவுள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் துப்பட்டாவும் காணவில்லை. அதையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications