என்னையும், நிருபரையும் கற்பழித்த 5 பேரின் ஆண்மையை நீக்க வேண்டும்: கால் சென்டர் ஊழியை ஆவேசம்
மும்பை: மும்பை சக்தி மில்ஸில் கற்பழிக்கப்பட்ட 19 வயது பெண் தன்னை சீரழித்தவர்களின் ஆண்மையை பறிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
மும்பை சக்தி மில்ஸில் கடந்த 22ம் தேதி பெண் பத்திரிக்கை புகைப்படக்காரர் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து மைனர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதே 5 பேர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சக்தி மில்ஸுக்கு தானும், தனது ஆண் நண்பரும் சென்றபோது தன்னை கற்பழித்ததாக கால் சென்டரில் பணியாற்றும் 19 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பெண் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கூறுகையில்,
கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சக்தி மில்ஸுக்கு நானும், எனது ஆண் நண்பரும் சென்றோம். அப்போது 5 பேர் எனது நண்பரை என் துப்பட்டாவால் கட்டிப் போட்டு அடித்தனர், என்னை கற்பழித்தனர். தற்போது பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் டிவியில் 5 பேரின் வரைபடங்களை பார்த்தேன். அவர்கள் தான் என்னையும் கற்பழித்தனர். அவர்கள் அனைவரின் ஆண்மை தன்மையை அகற்ற வேண்டும் என்றார்.
பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் சலிம் அன்சாரி, விஜய் ஜாதவ், முகமது காசிம் ஷேக், சிராஜ் கான் மற்றும் மைனர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications