அமைதிக்கு நோபல் பரிசு..மிஸ்டர் ஒபாமா..சிரியா மீதான தாக்குதல்னா எப்படி? சுளீர் கேள்வி!!
ஸ்டாக்ஹோம்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுவிட்டு இப்போது சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது எப்படி சரியாகும் என்று ஸ்வீடன் நாட்டு செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஸ்டாக்ஹோம் நகரில் ஒபாமாவும் ஸ்வீடன் பிரதமர் ப்ரெட்ரிக் ரெய்ன்பெய்ல்ட்டும் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுதான் செய்தியாளர் ஒருவர், நோபல் பரிசுபெற்ற நீங்கள் எப்படி சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராகி இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்குப் பதிலளித்த ஒபாமா, நாம் அமைதி வழிகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த உலகம் முரண்பாடனாதாக வன்முறை நிறைந்ததாக இருக்கிறது. அப்படியான நிலையில் நமது பொறுப்பு என்ன என்று கேள்வி எழுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
400 குழந்தைகள் உட்பட 1400 பொதுமக்கள் ரசாயன தாக்குதல் மூலம் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அர்த்தமுள்ள ஒரு நடவடிக்கை அவசியமானதாக இருக்கிறது. லிபியாவில் ருவாண்டாவில் சியரலியோனில் என்ன நடந்ததோ அதுதான் சிரியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications