செப்டம்பர் 15 முதல் அம்மா மினரல் வாட்டர் அறிமுகம்
சென்னை: அம்மா மினரல் குடிநீர் திட்டத்தை செப்டம்பர் 15 ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கின்றார்.
அண்ணா பிறந்த நாள் முதல் இந்த குடிநீர் விற்பனைக்கு வருவதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

சுத்தமான குடிநீருக்குப் பற்றாக்குறை
பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். தமிழகத்தில் பல இடங்களில் சுத்தமாக குடிநீரை அரசு வழங்குவது இல்லை.

மினரல் வாட்டர்
இதனால், மேல்தட்டு மக்கள் சுகாதாரத்தை காக்கும் விதமாக மினரல் வாட்டர் வாங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

அனைவரும் அருந்தும் மினரல் வாட்டர்
இந்த பழக்கம் தற்போது, நடுத்தர மக்களிடமும் தொற்றிக் கொண்டு, அதிகரித்து வருகின்றது.

பயணங்களில் கை கொடுப்பது மினரல் வாட்டரே
பேருந்து, ரயில் பயணிகளில் பயணம் செய்யும் பொது மக்கள் தான் அதிக அளவு மினரல் வாட்டரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

விலை ஜாஸ்திதான்
இதனால், பெரும்பாலான கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ரயில் பயணிகளின் நலன் கருதி, 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15 க்கு ரயில்வே சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பஸ்களில் அம்மா மினரல் வாட்டர்
இதனையடுத்து, இந்த திட்டத்தை பின்பற்றி, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 'அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

கும்மிடிப்பூண்டியில் குடிநீர் தயாரிப்பு
இதை செயல்படுத்தும் விதமாக, முதல் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் 'அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஒரு லிட்டர் ரூ. 10க்கு
இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும்.

அனைத்து அரசு பஸ்களிலும்
இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வரும் 15 ம் தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனை நடை முறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications